search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் நடவடிக்கை"

    • கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    • இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

     சேலம்:

    நாமக்கல் பரமத்திரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் அசைவ உணவு சாப்பிட்டு மயங்கிய 43 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அதிரடி சோதனை

    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைைமயில் அதிகாரிகள் 33 ஓட்டல்களில் நேற்று சோதனை நடத்தினர். இதில் சேலம் அஸ்தம்பட்டி, பேர்லேண்ட்ஸ், புதிய பஸ் நிலையம், சாரதா கல்லூரி ரோடு உள்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர் எடப்பாடி பகுதிகளிலும் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்த இந்த சோதனைகளில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 182 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக 1 0 கடைகளுக்கு விளக்கம் ேகட்டு நோட்டீஸ் அனுப்பி ய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடை உரிமையாளர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து இந்த கடைகளுக்கு போலீசார் மூலம் சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் கடை உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    2-வது நாளாக சோதனை

    தொடர்ந்து 2-வது நாளாக இன்று சேலம் மாநகரில் ஜங்சன், கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளில் ஓமலூர், தம்மம்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அந்தந்த பகுதி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையின் போது அதிக அளவில் தரமற்ற இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சோதனை தொடரும் என்றும், ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
    • ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலங்களை ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி அளித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மேலசித்தர்காடு கிராமம், செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நன்செய் வகைபாடுடைய 2.51 ஏக்கர் சென்ட் , புன்செய் வகைபாடுடைய 0.02 சென்ட் பரப்பளவு ஆக மொத்தம் 2.53 ஏக்கர் பரப்பளவு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ஆக்கிரமிப்பு நபர்களிடம் மேற்படி நிலங்களைகோயில் வசம் ஒப்படைக்காவிடில் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கோவில் தக்கார்/ஆய்வாளர் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் மேற்படி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே முன் வந்து நிலங்களை கோவில் வசம் ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி அளித்தனர்.

    இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில், தஞ்சாவூர் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர் முன்னிலையில் கோவில் தக்கார் / ஆய்வாளர் கீதாபாய், சிறப்பு அலுவலர்கள் அசோக்குமார், பிருந்தாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோயில் பணியாளர்களின் மூலம் மொத்தம் 2 ஏக்கர் 53 சென்ட் பரப்பளவு கொண்ட சுமார் ரூ.3795000 மதிப்புள்ள நிலச்சொத்துக்கள் மீட்கப்பட்டது. பின்னர் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு, மேற்படி கோயிலின் சுவாதீனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    மீட்டெடுக்கப்பட்டுள்ளகோயில் நிலங்கள் விரைவில் பொது ஏலத்திற்குக்கொண்டு வரப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் இது போன்ற கோயில் நிலங்கள் மீட்டெடுப்பு நடவடிக்கை கள் தொடரும் என தெரிவிக்கப்படடன.

    • திருப்பத்தூர் அருகே ஊரணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆ. தெக்கூர் கிராமத்தில் நகரத்தார்களால் கட்டப்பட்ட 120 ஆண்டு கால மீனாட்சி சுந்தரேஸ்வரரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் முன்பு 5 ஏக்கர் பரப்பளவில் ஊரணி இருந்தது. ஆனால் இந்த ஊரணியைச் சுற்றி வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமித்த தால் தண்ணீர் வரத்து பாதை அடைபட்டு பயன்பாடு இல்லாமல் போனது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டி 2 ஆண்டுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய் துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள் ஊரணியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள அனைத்து பகுதிகளையும் மீட்டெடுத்து ஊரணியை சீரமைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறையினருக்கும் கடந்த 17-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் தலைமையில் ஊரணியின் மேற்குப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மின் விநியோகத்தை தடை செய்தனர்.

    மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஊரணியை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் இருந்து வரும் சுமார் 47 குடியிருப்பு பகுதிகளின் உரிமை யாளர்களுக்கு மாற்று இடங்களில் 3 சென்ட் நிலம் வழங்கி, வரும் நாட்களில் அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக ஆக்கிரமிப்பு களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளால் பொன்னமராவதி-திருப்பத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வாய்க்கால் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 45 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர்.

    எடப்பாடி:

    எடப்பாடி அருகே அரசிராமணி ஒடசக்கரை பகுதியில் பொதுப்பணித்துறை வாய்க்கால் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சங்ககிரி தாசில்தார் பானுமதி உத்தரவின் பேரில் தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகர் ஸ்ரீதர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் அங்கு சென்று, பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 45 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர்.

    • கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
    • கிளினிக் ஆவணத்தில் குறிப்பிட்ட டாக்டர் அங்கு இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுவது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பகுதியில் தனியார் கிளினிக் உரிய ஆவணங்கள் இன்றி செயல்படுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அங்கிருந்த மருத்துவ ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிளினிக் ஆவணத்தில் குறிப்பிட்ட டாக்டர் அங்கு இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுவது தெரியவந்தது. மேலும் அங்கிருந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த கிளினிக் முறைகேடாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கிளினிக் மற்றும் அருகில் உள்ள மருந்துக்கடை மூடப்பட்டது.

    ஆய்வு குறித்து மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி கூறியதாவது:-

    புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கிளினிக் மற்றும் மருந்துக்கடையில் விசாரணை நடத்தப்பட்டது. பவித்ரா என்ற பெண் டாக்டர் இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வேறு ஒருவர் சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவ தகுதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கிளினிக், மருந்தகம் மூடப்பட்டுள்ளது. சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு நடத்தப்பட்டு அதன்பிறகு சீல் வைப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×